மறைவான இடங்களில் டாட்டூ போட வந்த 6 இளம்பெண்கள் பலாத்காரம்: டாட்டூ பிரபலம் அதிரடி கைது

திருவனந்தபுரம்,: கேரள மாநிலம், கொச்சியை சேர்ந்தவர் சுஜீஷ் (35). இவர் கொச்சியில் சேராநல்லூர் என்ற இடத்தில் டாட்டூ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கேரளாவில் மிகவும் பிரபலமான இந்த ஸ்டுடியோவுக்கு நடிகைகள் உள்பட ஏராளமான இளம்பெண்கள் தினமும் வருவது உண்டு. நடிகைகள் உள்பட முக்கியமான நபர்களுக்கு சுஜீஷ் தான் டாட்டூ போடுவது வழக்கம். பல இளம்பெண்கள் தங்களது மறைவான இடங்களில் கூட டாட்டூ போடுவதற்காக வருவது உண்டாம்.அவர்களை தனி அறைக்கு அழைத்து சென்று சுஜீஷ் தான் டாட்டூ வரைவார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு இளம்பெண் தன்னை சுஜீஷ் பலாத்காரம் செய்ததாக பேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.  ரகசிய இடத்தில் டாட்டூ போட வந்த போது சுஜீஷ் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். பின்னர் மேலும் சில இளம்பெண்கள் தங்களையும் சுஜீஷ் பலாத்காரம் செய்ததாக கூறினர். ஆனால் இது தொடர்பாக யாரும் போலீசில் புகார் செய்யாமல் இருந்தனர். ஆனாலும் கொச்சி போலீசார் நடவடிக்கை எடுக்க தீர்மானித்தனர். இதுகுறித்து அறிந்ததும் சுஜீஷ் தலைமறைவானார். இந்நிலையில் சுஜீஷ் தங்களை பலாத்காரம் செய்ததாக 6 இளம்பெண்கள் கொச்சி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிவந்தனர். இதில் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூர் என்ற இடத்தில் ஒரு வீட்டில் சுஜீஷ் தலைமறைவாக இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்தனர்.  இவர் மேலும் பல பெண்களை பலாத்காரம் செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகைகளுக்கும் தொல்லை?சுஜிஷின் ஸ்டுடியோவுக்கு சினிமா நடிகைகள் வருவது வழக்கம். எனவே அவர்களுக்கும் ஏதாவது பாலியல் தொல்லை கொடுத்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் இங்கு வந்து சென்றதில் அவர்களுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.