அரசு மருத்துவமனையில் செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இருவர் கைது <!– அரசு மருத்துவமனையில் செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட… –>

புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனையில், செவிலியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, மருந்து மாத்திரைகளை வீசி எறிந்த இருவரை போலீசார் விரைந்து வந்து கைது செய்தனர்.

திருபுவனை அரசு மருத்துவமனைக்கு கையில் ரத்த காயங்களுடன் வந்த சுஜித் என்பவருக்கு செவிலியர் ஒருவர் முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.

சுஜித்துடன் வந்த இருவர், செவிலியர் சரியாக கட்டு போடவில்லை என குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், மருத்துவமனையில் இருந்த மாத்திரைகளையும் தரையில் வீசி எறிந்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்து விரைந்த போலீசார் இருவரையும் உடனடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.