திருச்சி: இருசக்கர வாகனத்தின் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்து

சமயபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெய்குப்பை ஊராட்சியில் உள்ள காமராஜர் காலனியில் வசிப்பவர்கள் மலர்மன்னன் என்பவரின் மகன் கரன் (18). செல்வராஜ் என்பவரின் மகன் வெற்றிவேல் (28), மூக்கன் என்பவரின் மகன் முரளி (17) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் சமயபுரம் கூத்தூர் பகுதிக்கு வந்துவிட்டு மீண்டும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக கூத்தூர் பிரிவு சாலையை கடக்க முயன்றனர்.
image
அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது .இதில், வெற்றிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த முரளிதரன், கரன் ஆகிய இருவரும் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.