திருமண விழாவிற்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. சோகத்தை மூழ்கிய குடும்பம்..!

திருமண விழாவிற்காக பொருத்தப்பட்ட மின்விளக்கை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவருக்கு உமா தேவி என்ற மனைவியும் ஏழுமலை  மகனும் உள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக அங்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவன் அங்கு அலங்கரிகரிகப்பட்ட வயர்கள் மீது எதிர்பாராதவிதமாக கையை வைத்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.

அவரை மீட்ட அக்கம்பக்கதினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.