பாக்., முன்னாள் ஜனாதிபதி ரபிக் தரார் காலமானார்| Dinamalar

லாகூர் : பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி ரபிக் தரார், 92, முதுமை தொடர்பான உடல்நல பாதிப்புகளால் காலமானார்.

அண்டை நாடான பாகிஸ்தானில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆதரவுடன், ஓய்வு பெற்ற நீதிபதி ரபிக் தரார் 1997ல் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார்,

பின், 1999ல் பர்வேஷ் முஷரப் தலைமையிலான ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய பிறகும், அவர்கள் அனுமதியுடன் 2001 வரை, அவர் ஜனாதிபதி பொறுப்பில் நீடித்தார்.

இந்நிலையில், முதுமை தொடர்பான உடல் நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்த ரபிக் தரார் லாகூரில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார்.

இவரது மறைவிற்கு பாக். பிரதமர் இம்ரான் கான், , ஜனாதிபதி ஆரிப் அலி, ராணுவ தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.