பாலியல் வழக்கில் பிரபல இயக்குனர் கைது..!அதிர்ச்சியில் திரைத்துறையினர்..!

சமீபகாலமாக சினிமாத்துறையில் பாலியல் வன்கொடுமைகள் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவிலேயே தற்போது பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் வேளையில் சினிமாத்துறையில் நாளுக்கு நாள் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என ஆங்காங்கே பாலியல் குற்றங்கள் நடைபெறுவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு கூட me too விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தனுஷின் பதிவிற்கு பின்னால் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கின்றதா ? அடேங்கப்பா..!

இந்நிலையில் தற்போது ஒரு
இயக்குனர்
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டது திரைத்துறையினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பிரபல மலையாள இயக்குனரான
லீஜு கிருஷ்ணா
தன்னிடம் பணியாற்றிய பெண்ணிற்கு கடந்த ஆறு மாதகாலமாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக போடப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் கண்ணுரில் இந்த வழக்கு பதிவாகியுள்ளது. இயக்குனர் லீஜு அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி ஆறு மாதகாலமாக பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் புகாரளித்துள்ளார். பாதுகாப்பு நலன் கருதி போலீசார் அந்த பெண்ணின் விவரத்தை வெளியிடவில்லை.

தற்போது கைது செய்யப்பட்ட லீஜு கிருஷ்ணா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இயக்குனர் லீஜு கிருஷ்ணா மலையாளத்தில்
நிவின் பாலி
மற்றும்
மஞ்சு வாரியார்
நடிக்கும் படத்தை இயக்கிக்கொண்டிருக்கின்றார். இந்நிலையில் இயக்குனர் கைதானதால் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெய்வம் தல.. AK – வ பாத்தா போதும்…இது இதுதான் எங்களுக்கு தீபாவளி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.