மகளின் திருமணத்திற்குச் சென்று திரும்பிய குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

புதுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
புதுக்கோட்டை பெரியார் நகர் இரட்டை ரோட்டில் வசிப்பவர் மனோன்மணி. இவர் தனது கணவர் சின்னதுரையை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் மனோன்மணியின் மகள் வெண்ணிலாவின் திருமணத்திற்காக கனடாவில் மருத்துவராக பணி புரியும் தனது மகன் பாரதிராஜா மற்றும் குடும்பத்தினருடன் காரைக்குடிக்குச் சென்றுள்ளனர்.
image
இதையடுத்து திருமணம் முடிந்து வீட்டிற்குத் திரும்பிய மனோன்மணி குடும்பத்தினர், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது திருமணம் செய்துள்ள தனது மகளுக்கு கொடுக்க வைத்திருந்த 70 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்ததை அடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
image
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற நகர துணை காவல் கண்காணிப்பாளர் லில்லிகிரேஸ் தலைமையிலான நகர காவல் துறையினர் மனோன்மணி குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் 70 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.