உலக சூழ்நிலையையும் மீறி நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்கும்| Dinamalar

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, தற்போதைய புவி சார் அரசியல் இடர்பாடுகளையும் மீறி, 31.57 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியுஷ் கோயல் கூறியுள்ளார்.

இந்திய வர்த்தக, தொழிலக கூட்டமைப்பான ‘அசோசெம்’ அமைப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் கூறியதாவது:தற்போதைய புவிசார் பிரச்னைகளையும் மீறி, நாட்டின் ஏற்றுமதி, நடப்பு ஆண்டில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில், கடந்த ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில், ஏற்றுமதி 28.80 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

எனவே, தற்போதைய பிரச்னைகளையும் மீறி, ஏற்றுமதி 31.57 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என நம்புகிறேன்.மேலும், சேவைகள் துறை ஏற்றுமதியும், நடப்பு நிதியாண்டில் 19.25 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.