"கருத்துக் கணிப்புகள் முக்கியமில்லை; நாங்கள்தான் வருவோம்" – அகிலேஷ் யாதவ்

உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்ற கருத்துக் கணிப்புகளை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்  நிராகரித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், “கருத்துக்கணிப்பில் அவர்களுக்கு கிடைத்ததை காட்டட்டும்,  உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று சமாஜ்வாதி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்”எனக் கூறினார்
image
நேற்றுடன் உத்தரப் பிரதேசத்தில் 7 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றது. இந்த சூழலில் பல நிறுவனங்கள் தங்களின் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது, இந்த கருத்துக்கணிப்புகளில் பாஜகவே மீண்டும் வெற்றிபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 10ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.