தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை..மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள் சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, இன்று தேர்த்திருவிழா நடைபெற உள்ளது.

இதனால் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஏப்ரல் 9ம் தேதி வேலை நாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.