தூத்துக்குடி: திருமணமான ஐந்தே மாதத்தில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

தூத்துக்குடியில் திருமணமான 5 மாதத்தில் இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்ததாக அவரது கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் பாலதண்டாயுத நகரைச் சேர்ந்தவர் சண்முகம் – மாரியம்மாள் தம்பதியரின் மகள் மாரிச்செல்வி (19). இவருக்கும் தூத்துக்குடி அண்ணாநகர் 10வது தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் (27) என்பவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது.
image
இந்நிலையில், திருமணமான நாளிலிருந்து அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக மாரிச்செல்வியை அவரது கணவர் பொன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் தம்பதியர் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொன்ராஜ், தனது மனைவியை கடந்த வாரம் அவரது தாயார் மாரியம்மாள் வீட்டில் விட்டுள்ளார்.
இதையடுத்து சில நாட்களுக்குப் பின்னர் மாரியம்மாள், மருமகன் பொன்ராஜுக்கு போன் செய்து மகளை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், அவருடன் எனக்கு வாழ பிடிக்கவில்லை. உங்கள் மகளை வீட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டாராம். இதனால் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
image
இந்நிலையில், நேற்று நள்ளிரவு பொன்ராஜ் தனது நண்பர்கள் இருவருடன் மனைவி வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது அவர் திடீரென மனைவியை சராமாரியாக வெட்டியுள்ளார். இதனை தடுக்க முயன்ற அவரது மாமியாரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதில் மாரிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கொலை செய்யப்பட்ட மாரிசெல்வி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.