பாக்.,கில் குண்டு வெடித்து 5 வீரர்கள் பலி| Dinamalar

கராச்சி:பாகிஸ்தானில் நேற்று ஜனாதிபதி வருகையின் போது பலுசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடித்து ஐந்து பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். காயம் அடைந்த 28 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அண்டை நாடான பாகிஸ்தானின் ஜனாதிபதி ஆரிப் அல்வி தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்க நேற்று வந்தார். அப்போது நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கே அருகே குண்டு வெடித்தது. இதில் பாதுகாப்பு படையை சேர்ந்த ஐந்து வீரர்கள் பலியாகினர். மேலும் 28 பேர் காயம் அடைந்தனர்.

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அருகில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நடந்த இந்த பயங்கரவாத செயலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. விசாரணை நடக்கிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.