2 இரு சக்கர வாகனங்கள் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து – 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி <!– 2 இரு சக்கர வாகனங்கள் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோ… –>

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது காய்கறி ஏற்றி சென்ற சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்த ஒரு குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கோவையிலிருந்து மணப்பாறை நோக்கி குமரேசன், அவரது மனைவி ஆனந்தி மற்றும் அவர்களது 3 வயது பெண் குழந்தை ஒரு வாகனத்திலும், அவர்களது உறவினர்களான முருகன் அவரது மனைவி முத்துலட்சுமி ஆகியோர் மற்றொரு இருசக்கர வாகனத்திலும் சென்றுக் கொண்டிருந்தனர்.

அதிகாலையில் புத்தரசல் அருகே சென்ற போது, எதிரில் இருந்து வேகமாக கோவை நோக்கி சென்ற சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது.

இதில் 4 பேர் பலியான நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் தப்பி ஓடியதாக கூறப்படும் நிலையில், அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.