மதிமுக பொதுக்குழு! 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.!

மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தலமைக் கழக நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 28 ஆவது பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி கால 10 மணிக்கு சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்றைய தினம், கட்சியில் காலியாக உள்ள தலைமை நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 துணைப் பொதுச்செயலாளர்கள், ஒரு தலைமைக் கழகச் செயலாளர் மற்றும் ஒரு தணிக்கைக் குழு உறுப்பினருக்கான தேர்தல் அன்றைய தினம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவங்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் 20-ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணைப் பொதுச்செயலாளர் மற்றும் தலைமைக் கழகச் செயலாளர் பதவிக்கு விண்ணப்பிக்க தலா 25 ஆயிரம் ரூபாயும், தணிக்கைக் குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்க 10 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் எனவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையராக கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் இரா.பிரியகுமார் அவர்கள் செயல்படுவார் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.