ஹங்கேரி பிரதமருடன் பிரதமர் மோடி பேச்சு| Dinamalar

புதுடில்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ஹங்கேரி பிரதமருடன் தொலைபேசியில் உரையாடினார்.
ரஷ்ய ராணுவம், உக்ரைன் மீது கடந்த இரு வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி , நேற்று ஹங்கேரி நாட்டு பிரதமர் விக்டர் ஓர்பனிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். இருவரும் உக்ரைனின் தற்போதைய நிலவரம் , உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.