“உக்ரைன் சரணடையாது, ஆனால்…!" – உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்

கடந்த மாதம் 24-ம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்பேரில் உக்ரைனில் ரஷ்யப் படையினர் தொடங்கிய போர் 15-வது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பல்வேறு நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தாலும், ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் இன்னும் முடிவுக்கு வராமலே இருக்கிறது. போர் நிறுத்துவது தொடர்பாக பெலாரஸில் மூன்று முறை உக்ரைனும், ரஷ்யாவும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியும் இரு தரப்பிலிருந்து சுமுகமான முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், நான்காவது முறையாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் ஆகியோர் துருக்கியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசிய உக்ரைன் வெளியுறவுத்துறை டிமிட்ரோ குலேபா, “போர் நிறுத்தம் தொடர்பாக நாங்கள் பேசினோம். ஆனால், அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில், மற்ற முடிவெடுப்பாளர்கள் ரஷ்யாவில் இருப்பதாகத் தெரிகிறது. உக்ரைன் சரணடையவில்லை, சரணடையாது என்பதை நான் மீண்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். அதற்கான முடிவுகளைத் தேடுகிறோம். விவாதம் அல்லது தீர்வுகளைத் தேடும் பட்சத்தில், லாவ்ரோவை மீண்டும் இதேபோல் சந்திக்க நாங்கள் தயார்” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.