கச்சத்தீவு திருவிழா: 80 பேருக்கு மட்டுமே அனுமதி

கொழும்பு:
ச்சத்தீவு திருவிழாவுக்கு 80 பேருக்கு மட்டுமே அனுமதி அழுகப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை – இந்திய மீனவர்களின் சகோதரத்துவத்தின் அடையாளமாக திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு அடைந்துள்ளன. இந்த திருவிழா நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.

இந்த திருவிழாவில் 100 பேர் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இவர்களுக்கான ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு வந்த நிலையில், 80 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தவகல் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.