குடிச்சுட்டு கார் ஓட்டலீங்க… கண்ணீர்விட்ட ஆர்த்தி அன்ட் கணேஷ்!

தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் நடிகை
ஆர்த்தி
மற்றும் அவரது கணவர்
கணேஷ்கர்
. இருவரும் நகைச்சுவை நடிகர்களாக உள்ளனர். சினிமா மட்டுமின்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சென்னை பட்டினப்பாக்கம் சாலையில் கணேஷ்கரின் கார் விபத்துக்குள்ளானது. இதையடுத்து குடி போதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு கணேஷ்கர் தப்பி ஓடி விட்டதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் வாரிசுடன் வெளிநாடு சுற்றுலா சென்ற இயக்குநர் பாலாவின் மனைவி… வெளியான பகீர் தகவல்!

இந்நிலையில் விபத்து குறித்து ஆர்த்தியும் கணேஷும் முதல் முறையாக வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளனர். அதில் கணேஷ்கர் தான் குடித்துவிட்டு கார் ஓட்டவில்லை என்றும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடவில்லை என்றும் கூறியுள்ளனர்.

ஆர்த்தி, புத்தக வெளியீட்டு விழாவில் ட்ராப் செய்துவிட்டு அவருக்காக பட்டினப்பாக்கம் சாலையில் காத்திருந்ததாகவும், விழா முடிந்ததும் அவரை திருப்பி அழைத்து வர செல்லும் போது ஸ்பீடு பிரேக்கர் இருந்தது தெரியாமல் செண்டர் மீடியனில் மோதியதாகவும் கூறியுள்ளனர்.

அந்தப் படத்தில் உண்டான கெமிஸ்ட்ரி.. பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருந்த பாலா… வைரலாகும் போட்டோ!

மேலும் விபத்தால் முதுகு, நெஞ்சு, கைகாலில் அடிப்பட்டதாகவும், இதனால் மூச்சு திணறல் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள்தான் ஆர்த்திக்கு போன் செய்து விஷயத்தை தெரியப் படுத்தியதாகவும் கணேஷ்கரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாகவும் கூறியுள்ளனர். இதனால் கணேஷ்கர் தப்பி ஓடிவிட்டதாக தவறான தகவல் பரவி விட்டது என்றும் கண்ணீருடன் விளக்கம் அளித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் படம் வரட்டும்; மேடையில் SK20 பற்றி பேசிய சத்யராஜ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.