சிங்கிள் டிஜிட்டை தாண்டல… தேசிய கட்சிகளின் தொண்டர்கள் ஷாக்!

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் அண்மையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன.

இதில் மலை 6 மணி நிலவரப்படி,
பாஜக
249 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 115 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றன.

இந்த இரு கட்சிகளுக்கு நேர்மாறாக தேசிய கட்சியாக கூறப்படும்
காங்கிரஸ்
வெறும் 2 இடங்களிலும், மாநிலத்தில் மற்றொரு பெரிய கட்சியாக சொ்ல்லப்படும் பகுஜன் சமாஜ் கட்சி ஒரேயொரு இடத்தில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜகவே உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

இதனால், நேரு காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு பல பிரதமர்களை தந்த உத்தரப் பிரதேசத்தில், சிங்கிள் டிஜிட்டில் எம்எல்ஏக்களை பெற்றுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

இதேபோன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் நான்கு முறை ஆட்சி புரிந்த கட்சி என்ற பெருமையை பெற்றுள்ள மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்த தேர்தலில் சிங்கிள் டிஜிட்டை தாண்டாமல், வெறும் ஒரேயொரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சி தொண்டர்களும் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.