தொப்பை முதல் புற்றுநோய் வரையுள்ள நோய்களை குணமாக்க வேண்டுமா? வெந்தயத்துடன் இந்த பொருளை சேர்த்து சாப்பிட்டு பாருங்க



பொதுவாக நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மசாலா பொருட்களும் மருத்துவ குணங்களைக் கொண்டவை.

அதில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகமும் ஒன்று. இந்த இரண்டு விதைகளையும் சரியான அளவில், சரியான வழியில் உட்கொண்டு வந்தால், அது உடலுக்கு பல வழிகளில் நன்மைகளை அளிக்கும்.

அந்தவகையில் வெந்தையத்தை கருஞ்சீரகத்துடன் சேர்த்து சாப்பிடுவதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை நீரில் ஊற வைத்து, அந்நீரை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது குடித்து வர வாய்வு தொல்லை, வயிறு உப்புசம் மற்றும் அடிவயிற்று வலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம். அதோடு செரிமான மண்டலத்தின் செயல்பாடும் மேம்படும்.
  • கருஞ்சீரகத்தை வெந்தயத்துடன் சேர்த்து நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால், விரைவில் கல்லீரலில் உள்ள கொழுப்பு குறையும் மற்றும் கல்லீரல் ஆரோக்கியமும் மேம்படும்.
  • வெந்தயம் மற்றும் கருஞ்சீரகம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் வெந்தயம் மற்றும் கருஞ்சீரக விதைகள் கணையத்தில் பீட்டா செல் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது. அதற்கு இவை இரண்டையும் நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடிக்க வேண்டும்.
  • வெந்தய விதைகள் மற்றும் கருஞ்சீரக விதைகளை ஒன்றாக நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்து வந்தால், சருமம் மற்றும் தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். 
  • வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆகவே இவற்றை உட்கொள்வதன் மூலம் புற்றுநோயின் அபாயம் குறையும். 
  • வெந்தயம் மற்றும் கருஞ்சீரக விதைகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, வெயிலில் 2 நாட்கள் உலர்த்த வேண்டும். பின் ஒவ்வொரு நாளும் 8 முதல் 10 விதைகளை சாப்பிட்டு வந்தால், சில நாட்களிலேயே தொப்பை மற்றும் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.