ரஹ்மானின் எதிர்கால திட்டம்

ரஹ்மானின் எதிர்கால திட்டம்

ரஹ்மானின் எதிர்கால திட்டம்

3/10/2022 3:47:14 PM

சென்னையில் 3 ஸ்டுடியோக்களை வைத்திருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான், முதல்முறையாக துபாயிலும் தனக்கென ஸ்டியோவை திறந்துள்ளார். இதற்கு ஃபிர்தவ்ஸ் ஸ்டுடியோ என பெயர் வைத்துள்ளார். ஃபிர்தவ்ஸ் என்ற அரபி சொல்லுக்கு சொர்க்கம் என்பது அர்த்தம். இந்த ஸ்டுடியோவுக்கு பல்வேறு இசை பிரபலங்கள் வந்து சென்றனர். சமீபத்தில் இளையராஜாவும் அங்கு சென்றார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பணிகளை பார்த்து, அவரை பாராட்டினார். இந்நிலையில் இந்த ஸ்டுடியோ பற்றிய புதிய தகவல் கசிந்துள்ளது. முழுக்க முழுக்க பெண் இசைக் கலைஞர்களால் இந்த ஸ்டுடியோ அமைக்கப்பட்டதாம்.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த பெண் இசைக்கலைஞர்கள் ஆடிஷனில் தேர்வாகி வந்து, இந்த ஸ்டுடியோவில் பணியாற்றி வருகிறார்கள். இங்கிருந்து சர்வதேச படங்களுக்கு இசை அமைக்கும் பணிகளை ரஹ்மான் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். வெளிநாட்டு பிரபலங்கள் ரஹ்மானை சந்திக்க இந்த ஸ்டுடியோவுக்குதான் இனி வரவேண்டியிருக்கும். அத்துடன் துபாயிலிருந்து சில சர்வதேச ஆல்பங்களையும் உருவாக்க ரஹ்மான் முடிவு செய்திருக்கிறார். அதற்கும் இந்த ஃபிர்தவ்ஸ் ஸ்டுடியோவை அவர் பயன்படுத்திக் கொள்வார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.