விமான டிக்கெட் விலை குறைய வாய்ப்பு..!

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் சர்வதேச விமான பயணக் கட்டுப்பாடுகளை விலக்கியுள்ள நிலையில், சர்வதேச விமான டிக்கெட் விலை 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 2 ஆண்டுகளாக விதிக்கப்பட்ட சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளால் விமான டிக்கெட் விலை சுமார் இரு மடங்கு உயர்ந்ததாக கூறப்படுகிறது.

தற்போது பல நாடுகள் கட்டுபாடுகளை தளர்த்தி வருவதால், லுஃப்தான்ஸா குழுமத்தின் சுவிஸ் ஏர்லைன்ஸ், வரும் நாட்களில் சர்வதேச விமான சேவையின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

அதே போல சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 17 சதவீதம் அதிக விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், இந்தியாவின் இண்டிகோ ஏர்லைன்ஸ் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.