இருசக்கர வாகனத்தோடு எரிந்த நிலையில் ஸ்டூடியோ கடை உரிமையாளர் சடலமாக மீட்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருசக்கர வாகனத்தோடு உடல் எரிந்த நிலையில் ஸ்டூடியோ கடை உரிமையாளர் சடலமாக மீட்கப்பட்டார்.

நத்தபட்டியைச் சேர்ந்த  போட்டோ ஸ்டுடியோ உரிமையாளரான பாலசுப்பிரமணி, நேற்றிரவு வேடசந்தூரில் நடைபெற்ற அரிமா சங்க கூட்டத்தில் கலந்துக்கொண்ட பின் நத்தப்பட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை நத்தப்பட்டியில் உள்ள தென்னை மரத்தோட்டத்திற்கு அருகே பாலசுப்பிரமணி அவரது இருசக்கர வாகனத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், பாலசுப்பிரமணி கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.