கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள் வன்முறையில் ஈடுபடலாம்- மேகாலயா ஆளுநர் எச்சரிக்கை

ஷிலோங்:
மேகாலயா மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசியதாவது:
மத்திய அரசுக்கு எனது அறிவுரை என்னவென்றால், விவசாயிகளுடன் மோதாதீர்கள், அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். தங்களுக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு தேவையானது பேச்சுவார்த்தை மூலம் கொடுக்கப்படவில்லை என்றால் அவர்கள் அதை போராட்டத்தின் மூலம் பெற்றுக்கொள்வார்கள். 
போராட்டம் மூலம் பெற முடியவில்லை என்றால் அவர்கள் வன்முறை மூலம் பெற்றுக்கொள்வார்கள். விவசாயிகளை தடுக்க முடியாது. கோரிக்கைகளை எப்படி நிறைவேற்றிக்கொள்வது என விவசாயிகளுக்கு தெரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். 
மத்திய அரசுடன் எனக்கு எந்த பகையும் இல்லை, ஆனால் விவசாயிகளுக்காக எனது பதவியை விட்டுக்கொடுக்க முடியும். விவசாயிகள் பிரச்சினை குறித்து பேசுவதால் எனது பதவியை இழப்பது பற்றியும் எனக்கு கவலையில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.