சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ பிரிவு தொடக்கம்.!

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் புதிய முயற்சியாக திருநங்கைகளுக்கு என தனியாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

அந்த மருத்துவமனையின் டீன் வள்ளி சத்தியமூர்த்தி திருநங்கைகளுக்கான மருத்துவ பிரிவை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய டீன் வள்ளி சத்தியமூர்த்தி, திருநங்கைகளுக்கு தேவையான அனைத்து வகையான சிகிச்சைகளை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.