தாயார் காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரதமர் மோடி| Dinamalar

ஆமதாபாத்: இரு நாள் பயணமாக குஜராத் வந்திருந்த பிரதமர் மோடி, தனது வீட்டிற்கு சென்று தாயாரை சந்தித்து பேசினார்.

5 மாநில தேர்தல்களில் 4 ல் பா.ஜ. வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில்இரு நாள் பயணமாக பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் வந்தார். விமான நிலையத்திலிருந்து தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பின் பா.ஜ., அலுவலகம் சென்று அங்கு எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் காந்திநகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்று தாயார் ஹீராபென்னை சந்தித்தார். அப்போது தாயார் காலில் விழுந்து வணங்கினார். மகனை ஆசீர்வதித்தார் தாயார் ஹீரா பென், பின்னர் தாயாருடன் உணவு அருந்தினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.