திருவள்ளூரில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஆதரவற்ற மகளிருக்கு தையல் இயந்திரங்களை வழங்கிய எம்.எல்.ஏ., V.G.ராஜேந்திரன்.!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ட்ரீம் இந்தியா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி ராஜேந்திரன் கலந்துக்கொண்டு ஆதரவற்ற மகளிருக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.

திருவள்ளூர் ஈக்காடு பகுதியில் உள்ள ட்ரீம் இந்தியா தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அறக்கட்டளை சார்பாக நடந்த இந்நிகழ்ச்சியில் இலவச ஓட்டுநர் பயிற்சி வகுப்புக்கான வாகனத்தை திருவள்ளூர் எம்.எல்.ஏ வி.ஜி ராஜேந்திரன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து, ஆதரவற்ற பெண்கள் 25 பேருக்கு சுயதொழில் செய்வதற்காக தையல் இயந்திரங்களையும், காது கேளாத 10 ஆண்களுக்கு காது கேட்கும் கருவிகள் மற்றும் 100 மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.