பஸ் விபத்தில் 14 பேர் பலி| Dinamalar

காத்மாண்டு,:நேபாளத்தில் மலையில் இருந்து பஸ் விழுந்து விபத்துக்குள்ளானதில், 14 பேர் பலியாகினர்.

நம் அண்டை நாடான நேபாளத்தில், 20 பயணியருடன் புறப்பட்ட பஸ், தமக் என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பஸ் மலைப் பாதையில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, 1,000 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், மீட்புப் படையினர் உதவியுடன், பலியான 14 பேரின் உடல்களை மீட்டனர்.

பஸ்சில் சிக்கி உயிருக்குப் போராடிய ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.நேபாளத்தில் கடந்த மாதம் புது மணத் தம்பதி சென்ற வாகனம், மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்துக்கு உள்ளானதில், எட்டு பேர் பலியாகினர்; ஐந்து பேர் படுகாயம் அடைந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.