பாலக்காட்டில் கோவில் திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த யானை மிரண்டு ஓட்டம்.!

கேரள மாநில பாலக்காட்டில் திருவிழா ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த யானை, மேலே ஆள் அமர்ந்திருக்கும் போதே திடீரென மிரண்டு ஓடியதோடு, லாரியை முன்னோக்கியே துரத்திச் செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

சண்டை மேளம் முழங்க ஊர்வலம் நடந்து கொண்டிருந்த நிலையில், ஊர்வலத்தில் பங்கேற்றிருந்த யானை திடீரென அலறியடித்து ஓடியது. யானையின் மீது அமர்ந்திருந்த இரண்டு பேர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்த நிலையில், தனது தும்பிக்கையாலும், தந்தத்தை வைத்தும் லாரியை முன்னோக்கியே துரத்திச் சென்றது.

லாரி ஓட்டுநர் சாதூர்யமாக லாரியை பின்னோக்கியே நகர்த்திச் சென்றார். பின்னரும், ஆக்ரோஷம் கொண்ட யானை, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியது.

பின்னர் சில மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானை அமைதிபடுத்தப்பட்ட நிலையில், அதன் மீது அமர்ந்திருந்த இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.