மருத்துவமனையில் முதல்வர் அனுமதி – அதிர்ச்சியில் தொண்டர்கள்!

தெலங்கானா மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா மாநில முதலமைச்சருமான சந்திரசேகர் ராவுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, தலைநகர் ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனைக்கு உடல் நல பரிசோதனைக்காக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் இன்று வந்தார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட அனைத்து விதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முதலமைச்சர் சந்திரசேகர் ராவுடன், அவரது மனைவியும், மகளும் உடன் வந்திருந்தனர்.

இது தொடர்பாக தெலங்கானா மாநில முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் நலப் பரிசோதனைக்காக முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் யசோதா மருத்துவமனைக்கு சென்றதாகவும், அங்கு அவருக்கு இதயம் தொடர்பான ஆஞ்சியோகிராம் பரிசோதனையை மருத்துவர்கள் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் பங்கேற்ற இருந்த நிகழ்ச்சிகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

யாதாத்ரி கோவிலுக்கு செல்லவிருந்த முதலமைச்சரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு, சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.