உக்ரைனில் சிக்கிய தமிழக மாணவர்களை பத்திரமாக மீட்டதற்காக வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் நன்றி

உக்ரைனில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டில் இருந்து திரும்பிய தமிழக மாணவ, மாணவிகளின் கடைசி குழுவினரை சென்னை விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்ற பிறகு மத்திய அமைச்சர் ஜெயசங்கரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.