எலக்ட்ரிக்கல் கடையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை ; கொள்ளையர்களுக்கு போலீசார் வலைவீச்சு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை மர்மநபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

விராலிமலை புதிய பேருந்து நிலையம் அருகே பாப்புலர் எலக்ட்ரிக்கல் என்ற கடையின் பின்புறம் போடப்பட்டிருந்த ஆஸ்பெட்டாஸ் சீட்டை பிரித்து ஜன்னல் கம்பியை வளைத்து கடைக்குள் புகுந்த மர்மநபர் அங்கிருந்த வயர்கள், ஸ்விட்ச் போர்டுகள் உள்ளிட்ட ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான மின்சாதன பொருட்களை திருடிச் சென்றுள்ளான்.

இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், இன்று காலை வழக்கம் போல் கடையை திறந்த போது பொருட்கள் களவாடப்பட்டிருப்பதை அறிந்த கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.