சட்டக் கல்வியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு: தலைமை நீதிபதி| Dinamalar

புதுடில்லி: ‘மாவட்ட அளவில் பெண் நீதிபதிகளை அதிகளவில் நியமிக்கும் வகையில், சட்டக் கல்வியில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்,” என, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் சார்பில், முதல் முறையாக சர்வதேச பெண் நீதிபதிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி டில்லியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி என்.வி. ரமணா பேசியதாவது:தெலுங்கானாவில் மாவட்ட நீதிபதிகளில், 52 சதவீதம் பேர் பெண்கள். அசாமில், 46 சதவீதம்; ஆந்திராவில், 45 சதவீதம்; ஒடிசாவில், 42 சதவீதம்; ராஜஸ்தானில், 40 சதவீதம் பெண் நீதிபதிகள் உள்ளனர்.

latest tamil news

இதுபோல அனைத்து மாநிலங்களிலும், சட்டக் கல்வியில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதன் வாயிலாக மாவட்ட நீதிமன்றங்களில் அதிக அளவு பெண் நீதிபதிகள் நமக்கு கிடைப்பர்.பெண்களுக்கு சம உரிமை அளிப்பதை புரட்சி என்று கூறினால், அந்தப் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். அதை நான் ஆதரிக்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.