நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு – திங்கள்கிழமை தொடக்கம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு திங்கட்கிழமை தொடங்குகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி இறுதியில் தொடங்கிய நிலையில், பிப்ரவரி ஒன்றாம் தேதி 2022 -23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் முதல் அமர்வு, சுமார் ஒரு மாத காலம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது அமர்வு திங்களன்று தொடங்குகிறது.
image

ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த அமர்வும் கொரோனா விதிகளின்படியே நடைபெறும் எனத் தெரிகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அதுபற்றிய விவாதங்கள் இடம்பெறக்கூடும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.