ரேஷன் கார்டில் இறந்தவர் பெயர் | Dinamalar

புதுச்சேரி : ரேஷன் கார்டில் இறந்தவர்கள் பெயர் இருந்தால், வரும் 31ம் தேதிக்குள் நீக்கம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடிமைப்பொருள் வழங்கல் துறையால் வழங்கப்பட்ட ரேஷன் கார்டில் குறிப்பிட்டுள்ள நபர்களில் எவரேனும் இறக்க நேரிட்டால், அதுகுறித்த விபரங்களை துறை அலுவலகத்தில் உடனடியாக சமர்ப்பித்து, பெயர்களை நீக்கிக் கொள்ள வேண்டியது குடும்பத் தலைவரின் கடமை. நீக்காமல் இருப்பது
சட்டப்படி குற்றமாகும். எனவே, இறந்தவர் பெயரை ரேஷன் கார்டில் இருந்து நீக்காமல் இருந்தால், உடனடியாக அதுகுறித்த ஆவணங்களை வரும் 31ம் தேதிக்குள் குடிமைப்பொருள் வழங்கல் துறையில் சமர்பித்து பெயரை நீக்கிக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.பெயரை நீக்கம் செய்திட dcsca.py.gov.in என்ற இணையதள முகவரி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு, செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.