8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை… இளளைஞர் மீது பாய்ந்தது போக்சோ..!

சிறுமியுடன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டால் இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் மாகலிங்கம். இவர் அதே பகுதியை சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவருக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த மாணவியின் உறவினர்கள் அவரை எச்சரித்து அனுப்பி கேட்காமல் அந்த மாணவியை தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். அந்த மாணவியை பின்தொடர்ந்து அவர் தனியாக பேச வேண்டும் இல்லையெனில் அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக தனது பெற்றோரிடம் இதுகுறித்து கூறியுள்ளார். அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் மகாலிங்கத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.