இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட்.. இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள்.!

பெங்களூருவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 86 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி  ஸ்டேடியத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஆடத் தொடங்கியது.

இலங்கை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59.1 ஓவர்களில் 252 ரன்களை எடுத்தது.

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் 92ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய இலங்கை அணி ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 86ரன்களை எடுத்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.