சீனாவில் வேகமெடுக்கும் தினசரி கொரோனா பாதிப்பு..! தொற்று எண்ணிக்கை 3,400 ஆக பதிவு

பீஜிங்,
உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது.

இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா பரவி வருவதாக கூறப்படுகிறது. 
அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது முந்தைய நாளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இதன்படி இரண்டு ஆண்டுகளில் சீனா அதன் கடுமையான வைரஸ் பாதிப்புகளை எதிர்கொள்கிறது.
கிட்டத்தட்ட 19 மாகாணங்கள் ஓமிக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனாவை பாதிப்புகளை எதிர்த்துப் போராடுவதால், நாடு தழுவிய கொரோனா பாதிப்புகளால்  சீன அதிகாரிகள் ஷாங்காயில் பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளனர். ஜிலின் நகரத்தில் பகுதியளவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு நூற்றுக்கணக்கான சுற்றுப்புறங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்ட சீனா, விரைவான ஊரடங்குகள், பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தொற்று பரவல் தோன்றியபோது வெகுஜன சோதனைகள் மூலம் அமல்படுத்தப்பட்ட கடுமையான ‘பூஜ்ஜிய-கோவிட்’ கொள்கையை பராமரித்து வருகிறது. ஆனால் மிகவும் பரவக்கூடிய ஓமிக்ரான் மாறுபாடு மற்றும் அறிகுறியற்ற நிகழ்வுகளின் அதிகரிப்பு ஆகியவற்றால் இயக்கப்படும் சமீபத்திய வைரஸ் பரவல், அந்த அணுகுமுறைக்கு சவால் விடுத்துள்ளது.
இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,15,466 ஆக உயர்ந்துள்ளது. அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,636 ஆக உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.