தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக  குறைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரம் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 105 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று புதிய பாதிப்பு 100க்கு கீழ் குறைந்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 51ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. 
சென்னையில் இன்று 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கோவையில் 10  பேருக்கும், செங்கல்பட்டில் 7 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 14 மாவட்டங்களில் புதிய தொற்று பதிவாகவில்லை. 
இன்று ஒரே நாளில் 223 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ளது. 3வது நாளாக இன்றும் கொரோனாவால் உயிரிழப்பு எதுவும் இல்லை. மாநிலம் முழுவதும் 1,173 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.