பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறவேண்டும்; உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு.!

டெல்லி: பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறவேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், இது உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இந்நிலையில், தற்போதைய உலகளாவிய சூழலில் இந்தியாவின் பாதுகாப்பு தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில், இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் பேசுகையில், பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு, பொருளாதார  மேம்படுத்தும் என்றும், மேலும் பாதுகாப்புத்துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.