புதுச்சேரியில் ஹோட்டல் வரவேற்பு அறைக்குள் புகுந்து சத்தமின்றி டிராவை திறந்து செல்ஃபோனை திருடிய மர்மநபர்.!

புதுச்சேரி கிருமாம்பாக்கம் பகுதியில் தனியார் ஹோட்டல் ஒன்றின் வரவேற்பு அறைக்குள் புகுந்து மர்ம நபர் ஒருவன் செல்ஃபோனை திருடிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஹோட்டல் ரிசப்ஷனில் வரவேற்பாளராக பணிபுரிந்து வரும் ஐயப்பன் என்பவர் நேற்றிரவு அசந்து தூங்கிக்கொண்டிருந்ததை பயன்படுத்தி உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவன், தான் அணிந்திருந்த பனியனால் முகத்தை மறைத்துக்கொண்டு சத்தம் வராமல் உள்ளே மெதுவாக நடந்து சென்றான்.

பின்னர் அங்கிருந்த டிராவை திறந்து உள்ளே இருந்த செல்ஃபோனை திருடிக் கொண்டு சத்தம் வராமல் சென்றுவிட்டான். வரவேற்பாளர் ஐயப்பன் எழுந்து தனது செல்ஃபோனை தேடிய போது அதை காணவில்லை என்றவுடன், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் இரவு 11 மணியளவில் மர்ம நபர் செல்ஃபோனை திருடிச்சென்ற அந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து ஐயப்பன் புகார் அளித்ததன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு மர்மநபரை கிருமாம்பாக்கம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.