அனுமதியின்றி நடத்தப்பட்ட வெடிமருந்து குடோனில் வெடிவிபத்து ; ஒருவர் உடல் சிதறி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சியில் அனுமதியின்றி நடத்தப்பட்ட வெடிமருந்து குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில், ஒருவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

க.மாமனந்தல் பகுதியில் ஹபிபுல்லா, இஸ்மாயில் ஆகியோர் உரிய அனுமதி பெறாமல் குடோன் வைத்து நாட்டு வெடிகளை தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை அந்த குடோனில் நாட்டு வெடிகளை தயாரித்த போது ஏதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டு கட்டிடம் தரைமட்டமானது.

அதில், ஏழுமலை 20 அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டு உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக ஹபிபுல்லா, இஸ்மாயில் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.