உக்ரைன் மீதான போரில் 13,000 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து 13 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில் 1,000 ராணுவ வாகனங்கள், 74 போர் விமானங்கள் மற்றும் 86 ஹெலிகாப்டர்களை ரஷ்யா இழந்துள்ளதாகத் தெரிவித்தார்.

மனிதாபிமான வழித்தடங்கள் மூலம் ஒரு லட்சத்து 25 மக்களை ஏற்கனவே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டதாகக் கூறிய ஸெலன்ஸ்கி, உக்ரைனில் 2 ஆயிரத்து 187 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் மரியுபோல் நகரில் 100 குண்டுகளை ரஷ்யா வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.