ஐஸ்வர்யாவை அடுத்து பின்னாடியே வந்த தனுஷ்: ரசிகர்கள் ஹேப்பி

தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக ஜனவரி 17ம் தேதி சமூக வலைதளங்களில் அறிவித்தார்கள்.
தனுஷ்
ட்விட்டரிலும், ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமிலும் அறிவிப்பு வெளியிட்டனர்.

அதன் பிறகு ட்விட்டர் பக்கமே தனுஷ் வரவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது ஐஸ்வர்யா மீண்டும் இன்ஸ்டாகிராமுக்கு வந்துவிட்டார்.

மேலும் சில ஆண்டுகள் கழித்து ட்விட்டர் பக்கமும் வந்ததுடன், படு ஆக்டிவாக இருக்கிறார். தன் வேலை குறித்து அவ்வப்போது ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்.

‘DD’யால் ஐஸ்வர்யாவுக்கு புது சிக்கல்: விளாசும் நெட்டிசன்ஸ்
இந்நிலையில் தான் சுமார் 2 மாதங்கள் கழித்து ட்விட்டர் பக்கம் வந்திருக்கிறார் தனுஷ். பிரிவு அறிவிப்பை அடுத்து தன்
மாறன்
பட ரிலீஸ் குறித்து ட்வீட் செய்தார்.

தனுஷ் மீண்டும் ட்விட்டருக்கு வந்ததில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி. அதே சமயம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாறன் படம் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்ததில் வருத்தமும் கூட.

தனுஷால் கூட மாறனை காப்பாற்ற முடியாமல் போய்விட்டதே என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. மாறன் தியேட்டர்களில் அல்லாமல் ஓடிடியில் வெளியானதில் தனுஷுக்கு வருத்தம்.

படத்தை பார்த்தவர்களோ, நல்ல வேளை இது தியேட்டரில் வெளியாகவில்லை என்கிறார்கள். கார்த்திக் நரேன் ரொம்பவே மாறிவிட்டார். சென்டிமென்ட், மசாலா என்று கார்த்திக் நரேன் படம் எடுத்திருப்பதை தான் ஜீரணிக்க முடியவில்லை. அவரின் தனித்துவம் போய்விட்டது என்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.