கன்னியாகுமரி: சந்தேகத்தின் பேரில் மனைவியை கொன்ற கணவன் எடுத்த விபரீத முடிவு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்ட கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரை சேர்ந்தவர் ஜோஸ் (40). இவரது மனைவி வனஜா (33). இவர்களுக்கு மஞ்சு (13) அர்ச்சனா (11) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். வனஜா ஜோஸின் இரண்டாவது மனைவி ஆவார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்த ஜோஸ் சொந்த ஊர் திரும்பினார். இதையடுத்து மனைவியின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
image
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில், ஜோஸ் தனது மனைவி வனஜாவை கத்தியால் குத்திக் கொலை செய்து கட்டிலின் கீழ் மறைத்து வைத்துள்ளார். இதை மகள்கள் வெளியே சொல்லி விடுவார்கள் என்று பயந்த ஜோஸ் தனது இரண்டு குழந்தைகளையும் கயிற்றால் கட்டிப் போட்டு வைத்துள்ளார். இந்த நிலையில் இன்று அவரது மகள் அர்ச்சனாவின் கழுத்தை அறுத்துக்  கொலை செய்ய முயன்ற நிலையில், தந்தையிடம் இருந்து அவர் தப்பித்து சத்தம் போட்டுள்ளார்.
image
இதில் பயந்துபோன ஜோஸ், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இரண்டு மகள்களும் கதறி அழுதவாரே வெளியே வந்து அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளனர். இது குறித்த தகவல் போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதங்களை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அர்ச்சனா கழுத்தில் காயம் இருந்ததால் அவரை அரசு மருத்துவமனையில் சிகச்சைக்காக அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.