சென்னையில் பட்டப்பகலில் நடந்து சென்ற இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது.!

சென்னையை அடுத்த கொட்டிவாக்கத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.

கொட்டிவாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த சுமதி என்ற இளம்பெண்  கடந்த 9ம் தேதி, நடந்து சென்று கொண்டிருந்த போது அவருடைய 15 ஆயிரம் ரூபாய், மதிப்புள்ள செல்போனை இருவர் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி கூச்சலிட்டபடி அவர்களை பிடிப்பதற்காக துரத்திக் கொண்டு ஓடினார். ஆனால் அவர்கள் தப்பிச் சென்று விட்டதை அடுத்து சுமதி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி உதவியுடன் 2பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.