சொத்தை தன் பெயருக்கு மாற்றி| Dinamalar

தார்வாட் : சொத்தை தன் பெயருக்கு மாற்றி கொடுக்காததால் கணவரை கொலை செய்த மனைவியையும், இரு மகள்களையும் போலீசார் கைது செய்தனர்.தார்வாட் அருகே உள்ள மரேவாடா கிராமத்தை சேர்ந்தவர் ஈரப்பா, 45. இவரது மனைவி ஷோபா.இவர், தார்வாட் தாலுகா பா.ஜ., மகளிரணி பிரமுகராக உள்ளார். கணவனிடம் சொத்துகளை தனது பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி கேட்டு வந்துள்ளார்.இதற்கு கணவர் மறுத்துள்ளார்.

நேற்று முன்தினமும், வழக்கம் போல சொத்தை தனது பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி மனைவி தகராறு செய்துள்ளார்.அப்போதும் மறுத்ததால், இரண்டு மகள்களுடன் சேர்ந்து உருட்டு கட்டையால் கணவரை சரமாரியாக தாக்கினார்.படுகாயமடைந்த அவர், அதே இடத்தில் உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த மனைவி, போலீசில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக, அவரது உடலை கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்று விபத்தில் சிக்கியதாக நாடகமாடினார்.சந்தேகமடைந்த டாக்டர்கள், தார்வாட் ஊரக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சென்று, மனைவி, மகள்களிடம் விசாரணை நடத்தினர்.கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மூவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.