தங்கவயலில் மின் தடை| Dinamalar

தங்கவயல், : தங்கவயலில் நேற்று காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை மின் தடை செய்யப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் பிரம்மோற்சவ திருவிழாவின் நிகழ்ச்சிகள் கீதா சாலை, பிரிட்சர்ட் சாலைகளில் 50

ஒலிபெருக்கிகள் மூலம் பக்தியை கச்சேரி, மக்கள் வாத்தியம், பஜனைகள் ஒலிபரப்பு முடியாமல் தடையானது.தங்கவயலில் பத்து ஏ.டி.எம்., கிளைகள் உள்ளன. அவற்றில் ஒன்றிலும் பணம் எடுக்க முடியாமல் போனது. இதனால் பண நெருக்கடி ஏற்பட்டது.மின் இயந்திரங்கள் மூலம் இயங்கும்சிறு தொழில்கள் பாதித்தன.முகூர்த்த தினமான நேற்று மின் தடையால் உணவு தயாரிக்கும் பணிகளுக்கும் கஷ்டமானது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.