தரமற்ற உணவகத்தில் அரசுப் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், நடத்துனர் “சஸ்பெண்ட்”

கடலூரில், தரமற்ற உணவகத்தில் அரசுப் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

அரசுப் பேருந்துகள் தரமற்ற உணவகங்களில் நிறுத்தப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, பேருந்துகள் நிறுத்தப்பட வேண்டிய உணவகங்களின் பட்டியலை போக்குவரத்து துறை வெளியிட்டது.

இந்நிலையில், கடந்த 10ந் தேதி, சென்னையில் இருந்து விருத்தாச்சலத்துக்குத் சென்ற அரசுப் பேருந்து, அங்கீகரிக்கப்படாத தரமற்ற உணவகத்தில் நிறுத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனைத் தொடர்ந்து பேருந்தின் நடத்துனர் சேட்டு மற்றும் ஓட்டுநர் விஜயகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.