பார்லி., பட்ஜெட் இரண்டாம் கூட்டம் துவக்கம்| Dinamalar

புதுடில்லி: பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.,31ல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உரையுடன் துவங்கியது. பிப்.,1ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. முதல் கட்ட அமர்வு பிப்.,11ல் முடிந்தது. மூன்று வார இடைவெளிக்குப் பின், பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம் இன்று துவங்கியது. இதில், மத்திய பட்ஜெட் தொடர்பான மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக, முதல் கட்ட கூட்டத் தொடரில், காலையில் ராஜ்யசபாவும், மாலையில் லோக்சபாவும் இயங்கின. தற்போது, வைரஸ் பரவல் குறைந்துள்ளதால், இரு சபைகளையும் ஒரே நேரத்தில் துவங்கியுள்ளன. இந்த 2வது கூட்டம் ஏப்.,8ம் தேதி வரை நடக்க உள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.